கொல்கத்தா: இன்று, வங்காளம் மோடி ஜியுடன் நிற்கிறது; அது குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்கிறது என பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரணி நடத்தியப்பின் பொதுக்கூட்டத்தல் உரையாற்றிய ஜெ.பி நட்டா, போராட்டங்களின் போது நடந்த வன்முறையை மம்தா பானர்ஜி ஒரு முறை கூட கண்டிக்கவில்லை. முதல்வர் மேல்முறையீடு செய்கிறாரா அல்லது நடவடிக்கை எடுப்பாரா? ஒரு முதல்வருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்றார். காங்கிரஸ் நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால். அவர்களின் வாக்கு வங்கியை விரும்புகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.